எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளை அழியாமல் காப்பதே முதல் கடமை- சசிகலா!

Default Image

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளை அழியாமல் காப்பதே முதல் கடமை என சசிகலா கூறியுள்ளார்.

அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கருதியதாகவும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் தனித்துவமான சட்ட விதியை எம்ஜிஆர் உருவாக்கியதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது அதனை மாற்றும் வகையில் ஒரு சிலர் செயல்படுவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லா பலன்களை அடைவதையும், தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும் தொண்டர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் எனவும், எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதிகளை அழிந்து விடாமல் காப்பதே நமது முதல் கடமை எனவும், அதற்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்