வரும் 15ஆம் தேதி முதல் திரைஅரங்குகள் திறப்பு… மத்திய அரசு அறிவிப்பு..

Published by
Kaliraj

வரும், 15 தேதி வியாழன் முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து திரை அரங்கங்களும், கடந்த  மார்ச், 16 முதல், மூடப்பட்டன.தற்போது  வரும், 15 முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

  • திரையரங்க கேன்டீன்களில், பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
  • கேன்டீன்களில், ஆன்லைன் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட வேண்டும். அரங்கங்களுக்கு உள்ளே வந்து, உணவு பொருட்கள் வழங்க கூடாது.
  • அரங்கினுள் பார்வையாளர்கள் நுழையும் போது, உடல் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் அற்றவர்களை மட்டுமே, அரங்கினுள் அனுமதிக்க வேண்டும்.
  • அரங்கின் பல்வேறு இடங்களிலும், கைகளை சுத்தப்படுத்த, கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.
  • பார்வையாளர்கள் வரிசையில் வர, தரையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • இடைவேளையின் போது, இருக்கையை விட்டு எழுந்து செல்வதை, முடிந்தவரை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  • கழிப்பறை மற்றும் அரங்கின் இதர பகுதிகளில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பார்வையாளர்களின் வசதிக்காக, இடைவேளையின் கால அவகாசத்தை, வழக்கத்தை விட அதிகமாக நீட்டிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு பின்னும், திரை அரங்கு களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago