“தோல்வி பயம் வந்து விட்டது” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published by
பாலா கலியமூர்த்தி

நாங்கள் மனதால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

நெருங்கும் இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 14 நாட்களிலே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரதான கட்சிகளின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஒருபக்கம் திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

dmkcampaign

மறுபக்கம் அதிமுகவில் தென்னரசுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி பிரகாசம்:

இந்த நிலையில், அதிமுகவில் தென்னரசுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மேளம் அடித்துக்கொண்டே வீதி வீதியாக நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது செய்தியாளர்  ஆர்.பி.உதயகுமார், இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோல்வி பயத்தால் தான் இதனை அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

திமுக அரசால் மக்கள் வேதனை:

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறோம் என தெரிவித்தார். மேலும், திமுக அரசு செய்திருக்கக்கூடிய வேதனைகளால் மக்கள் துயரத்தில் உள்ளனர். மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் கடும் துன்பத்தில் இருக்கிறார்கள். திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் தோல்வி பயத்தால் 33 அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, பணத்தை தண்ணீராக வாரி இரைகிறார்கள்.

பணத்தை வாரி இரைக்கும் திமுக:

நாங்கள் மனதால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம், அவர்கள் பணத்தால் இரட்டை இலை வெற்றியை பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அது ஒருபோதும் நடக்காது. இரட்டை இலை தான் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் ஒரே அடையாளமாக உள்ளது. இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவு காலமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

6 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

6 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

6 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

6 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

6 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

7 hours ago