சுப நிகழ்ச்சிக்கு இனி குடும்பம் குடும்பமாக அரசு பேருந்தில் செல்லலாம்.!

Default Image
  • அண்மைக்காலத்தில் தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
  • சுப நிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்துகள் வாடகைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றுதான். இந்நிலையில் அண்மைக் காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதனால், சென்னை போக்குவரத்து கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது , திருமண நிகழ்ச்சிகள் சுற்றுலா விழாக்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் குழு பயணம் போன்றவை சென்னை மாநகரின் எல்லைக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்