ஜிஎஸ்டி தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது , தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. அப்போது, நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தகவல் கூறப்பட்டது.மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.1.51 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ. ரூ.11,269 கோடி ஜிஎஸ்டி இழப்பிடாக மத்திய அரசு தர வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது , தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது. அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில்
கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும் – மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி – மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெற
முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…