ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை.? தேர்தல் அலுவலகம் விசாரணை.!

Published by
மணிகண்டன்

Annamalai : பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 வார காலமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும்போது வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது போன்ற ஏதேனும் வீடியோ வெளியாகி விடுகிறது. பிறகு அதன் உண்மை தன்மையை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்ட கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஒரு பெண்மணி ஆரத்தி எடுத்தார். அப்போது அவரது கையில் அண்ணாமலை எதோ கொடுப்பது போலவோ, அல்லது ஆரத்தி தட்டை தாங்கி பிடிப்பது போலவோ ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

BJP State President K Annamalai Video Screenshot

இது குறித்து பதில் அளித்த கோவை மாவட்ட ஆட்சியர் (மாவட்ட தேர்தல் அலுவலர்), அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்த வீடியோ குறித்து அதன் உண்மை தன்மை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். முன்னதாக, ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடன் புகைப்படம் எடுத்த ஒரு நபருக்கு பணம் கொடுத்ததாக ஒரு விடியோவும் பரவியது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

31 minutes ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

1 hour ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

5 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

5 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

6 hours ago

பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!

சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…

7 hours ago