தற்போது இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக தோல்வியடையும் என்பதால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (அக்டோபர் 6 ஆம் தேதி)டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மிசோரம், மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான் , தெலுங்கானா , சத்திஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.பெரிதும் எதிர்பார்க்கபார்ட்ட தமிழகத்தின் திருப்பரங்குன்றம் , மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகத்தில் மழை காலம் என்றும் , திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை அளித்ததால் தமிழகத்துக்கு தற்போது தேர்தல் அறிவிப்பு இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தற்போது இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக தோல்வியடையும் என்பதால், மத்திய அரசோடு தேர்தல் ஆணையம் சேர்ந்துகொண்டு இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளது என்பது தான் உண்மையான காரணமாக தெரிகிறது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில்…
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…