16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர்!கொலை செய்துவிடுவதாக மிரட்டல்!

Default Image
  • மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே கூறினால் கொலை செய்வதாக மிரட்டிய வேன் ஓட்டுநர்.
  • தலைமறைவாகிய வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவருகின்றன.

மதுரை மாவட்டத்ததில் உள்ள மேலூர் அருகே உள்ள கந்தல் பட்டியை சேர்ந்தவர் ரேவதி ஆவார்.சுமார் 16 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.

அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது வென் ஓட்டுநரான ராஜாவுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.முதலில் அந்த சிறுமியிடம் ராஜா சாதாரணமாக பழகிவந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்து நெருங்கி பழகியுள்ளார்.அந்த சிறுமி கடந்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கம் போல வேனில் வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத இடம் பார்த்து அங்கு சிறுமியை ராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பதறிப்போன சிறுமி வெளியே கூறாமல் மறைத்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் சோகமாக இருந்த சிறுமியிடம் உறவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அழுத நிலையில் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்ட அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணாமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ராஜாவை தேடிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்