திடீர் மழை.! சாலையில் காய வைக்கப்பட்ட 5000 நெல்மூட்டைகள் சேதம்.! தமிழக விவசாயிகள் வேதனை.!

Published by
மணிகண்டன்

அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவுக்கு கொண்டு வர நெற்பயிரை சாலைகளில் கொட்டி காயவைத்துள்ளார் திருவாரூர் பகுதி விவசாயிகள். ஆனால், திடீரென்று பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  

காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

அறுவடை செய்த நேரத்தில் மழை பெய்து வரும் காரணத்தால் அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத அதிகபட்ச ஈரப்பத அளவுக்கு காய வைக்க முடியாமல், ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் .

ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில், திருவாரூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவுக்கு கொண்டு வர சுமார் 5000 மூட்டைகள் அளவுக்கு நெற்பயிரை சாலையில் காய வைத்துள்ளனர்.

அப்போது பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடிவிட்டது. இதனால் மீண்டும் ஈரப்பதம் கூடிவிட்டதே என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago