பரபரப்புக்கு மத்தியில் தொடங்கியது திமுக பேரணி

Published by
Venu
  • நேற்று இரவு திமுக பேரணி நடைபெறுமா? இல்லையா ? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
  • இதனிடையே இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று (டிசம்பர் 23ஆம் தேதி)  பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திமுகவின் பேரணிக்கு தடை கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்க நேற்று  கேட்டுக்கொண்டார்.இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேரணி போராட்டம் நடத்தலாம். அதற்க்கு  நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. பேரணி நடந்தால் சாமானியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது. பேரணியை காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அரசு தரப்பில் இதில் விளக்கம் அளிக்கையில், திமுக பேரணி நடத்தினால், அதற்கு திமுகதான் முழுப்பொறுப்பு என்று தெரிவித்தது.ஆனால் இந்த வழக்கில் திமுக பேரணி நடத்தலாம், நடத்தக்கூடாது என எந்தவித உத்தரவையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இந்த பேரணிக்கு தடை கேட்டு அவரச வழக்கு போட்டு எங்கள் பேரணியை விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி எனவும், அதிமுக சில நபர்களை நீதிபதி வீட்டிற்கே அனுப்பி தடை கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறிவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது.எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 4 ட்ரோன்கள் மற்றும் 110 கேமிராக்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படுகிறது.மேலும்  தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

24 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago