தி.மு.க ஒருபோதும் தயங்கியதில்லை -ஸ்டாலின்
உணர்வுடன் பணியாற்றிட தி.மு.க ஒருபோதும் தயங்கியதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட தி.மு.கழகம் ஒருபோதும் தயங்கியதில்லை.#CoronaVirus அச்சம் தணியும்வரை தனித்திருப்போம் – மனத்திடத்துடன் துணிந்திருப்போம் – எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம்!#LetterToBrethren pic.twitter.com/oVWBbfUB3z
— M.K.Stalin (@mkstalin) March 30, 2020
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட தி.மு.க ஒருபோதும் தயங்கியதில்லை. கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம் – மனத்திடத்துடன் துணிந்திருப்போம் – எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.