ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடக்கூடிய அரசு தான் திமுக அரசு.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆணைப்புளி மரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, புராதன சின்னமாக விளங்கும் ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டையும், அதன்பின் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.

அதன்பின் பேசிய அவர், ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடக்கூடிய அரசு தான் திமுக அரசு. அழாத பிள்ளைக்கு பல் கொடுக்கும் தாயாக திமுக அரசு செயல்படுகிறது. அனைவருக்கும் செவிமடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நல்ல பெயர்  கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்