அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, `பி.ஜே.பி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார் என்றும், அவருக்குத் துணையாக நானும் அமைச்சரும் இருப்போம்’ என்று உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஹெச்.ராஜா அவர்கள் பேசுகையில், பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு அத்வானி காலத்திலிருந்தே நேச்சுரல் கூட்டணி வைத்திருக்கிறது என்றும், ஏதாவது, பிரச்னைகளுக்காக மட்டுமே அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க-வினர் யாரையும் நான் ஒருபோதும் விமர்சனம் செய்து பேசியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எம்.பி-யானவுடன் காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான முயற்சியை எடுப்பேன் என்றும், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது. பிரதமர் மோடி இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராவார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…