விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு..!

Published by
Edison

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆனந்த் சர்மா மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.

கோவை மாவட்டம் பீளமேட்டில் வசிக்கின்ற பெண் ஒருவர்  துபாயில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்.இவர்,கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.அந்த பெண்ணுக்கு  தொழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால்,தொழில் ரீதியான விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த காரணத்தை பயன்படுத்தி,சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் சர்மா என்பவர் அவரை தொடர்பு கொண்டார்.

இதனையடுத்து,அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி ஆனந்த் சர்மா,அவருடன் நெருக்கமாக பழகினார்.

பின்னர்,தொழில் ரீதியாக வெளியூர் சென்றபோது,அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் ஆனந்த் சர்மா பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார். அந்த பெண்ணும் ஆனந்த் சர்மாவின் வார்த்தையினை நம்பி ஏமாந்துள்ளார் .

இதனையடுத்து,ஆனந்த் சர்மாவின் மீது சந்தேகம் வர,அவரைப் பற்றிய விபரங்களை அந்த பெண் சேகரிக்க ஆரம்பித்தார்.அப்போதுதான்,தன்னைப் போன்று திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பல பெண்களை ஆனந்த் சர்மா ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து,ஆனந்த் சர்மா மீது கோவை அனைத்து மகளிர் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதன்காரணமாக, போலீசார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனால்,ஆனந்த் சர்மா மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும்,ஆனந்த் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தும் முயற்சியில் மகளிர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago