பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.மேலும்,அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும்,இதற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…