அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னின்று நடத்திய பிரதமருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை கூறினார் துணை முதல்வர்!

Default Image

அயோத்தி ராமர் கோவில் உருவாகிட பிரதமர் மோடி முன்னின்று பூமி பூஜையை நடத்தி, அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.

அயோத்தியில் உருவாகும் மிகப்பெரிய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் காரியங்களை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அயோத்தியில் ராமர் கோவில் உருவாகிட பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை முன்னின்று நடத்தி அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அடிக்கல் நாட்டியது நாடெங்கும் வாழும் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் பல கோடி மக்களின் இதயங்களில் அளவில்லா மகிழ்ச்சியை உருவாக செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்