மாணவர்களே…இறுதித்தேர்வு இல்லை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மே 6,9 ஆகிய தேதிகள் முதல் மே 30,31 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் எனவும்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இறுதித்தேர்வு இல்லை:

இந்நிலையில்,தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.எனினும்,6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது?:

இதனிடையே,9 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வருகின்ற மே 2 முதல் 4 வரை நடைபெறும் எனவும்,6 முதல் 9 ஆம் வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடக்கம்:

மேலும்,நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி எனவும்,2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13 ஆம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதே வேளை 11 ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago