OPS : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். அதன்படி, இருவரும் ஒன்றாக இணைந்து இந்த மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளனர்.
இதனிடையே, பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தங்களது அணியின் செயல்பாடு, தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடலாம், யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்க்கு அதிகாரம் வழங்கி அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கூறியதாவது, கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் குறித்து ஆலோசித்து எதிர்காலத்தை நினைவில் வைத்து ஒரு நல்ல முடிவை நாங்கள் எல்லாம் சேர்ந்து எடுப்போம் என அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு உறுதி அளித்தார். மேலும், பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம் என்றும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…