சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில்  நடுகாட்டுபட்டி என்ற  கிராமத்தில் நேற்று  சுர்ஜித் என்ற2  வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறுகையில், குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு அருகே என்எல்சி, தனியார் அமைப்பு இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் மூடியுள்ளதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் நிலை குறித்து தெரியவில்லை .தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், எல்.எல்.சி வல்லுநர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்