அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை! கனிமொழி ட்வீட்!

Default Image

அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.

இன்று பல அரசியல் வாட்டரங்களில் ஊழல் என்பது மலிந்து போய் தான் உள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. தற்போது, , தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மாபெரும் ஊழல் புகார் அடங்குவதற்குள், தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகை மாவட்டத்தில் நடந்த ஊழல் மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகம் முழுக்க இது குறித்து ஆய்வு நடத்தினால், பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரும். அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல் நிறைந்துள்ள அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்