சென்னை, காசிமேடு பகுதியாயி சேர்ந்த வர சத்யராஜ். இவரது மனைவி பெயர் செலஸ்டின். இவ்ரகள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சத்யராஜ் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பிறந்து 18 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு பாலூட்டும் போது இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசார் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு பின்தலையில் பலத்த அடி பட்டு தான் இருந்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து விசாரித்தனர். அவர் குழந்தையை தரையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். செலஸ்டின் கொடுத்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது : அவர் தனது கணவர் சத்யராஜுடன் கட்டிட வேலைக்கு சென்றிருந்த போது அவருக்கு ஜெயந்தி என்ற வேறொரு பெண்ணுடன் திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது தெரிய வந்தது.
இவர் இப்படி வேறொரு பெண்ணுடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருப்பது, எனது வாழ்க்கையில் அது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் எனது முதல் குழந்தையாவே வளர்க்கமுடியாமல் கஷ்டப்படுவதால், இந்த குழந்தையையும் வழக்க முடியாது என குழந்தையை தரையில் தூக்கி அடித்தேன். குழந்தை சிறிது நேரத்தில் துடிதுடித்து இழந்தது. உடனே குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…