மனநலம் பாதிக்கப்பட்ட 3 மகன்களுக்காக தங்களது சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி…! எந்த கட்சிக்கு தெரியுமா…?

Default Image

தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகையை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் துளசிதாஸ்-மலர்க்கொடி. இவர்களுக்கு 3 மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் காலத்திற்கு பின், தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகை ஆகியவற்றை கட்சியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளனர்.

இதுகுறித்து துளசிதாஸ் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் மகத்தானது, நம்பிக்கைக்குரியது. எனவே தான் நான் இந்த இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன். தற்போது நான் உயில் எழுதி வைத்துள்ளேன். அதன்படி, எங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக, வீடு, வங்கி வைப்பு தொகை, பென்ஷன் உட்பட எல்லாவற்றையும் கட்சிக்கு கொடுத்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai