வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சட்டப்பேரவையின் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அதாவது,முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14 வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால் அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,தவறு உள்ள இயந்திரத்தின் வாக்குகளை பிறகு எண்ணிக்கொள்வதா அல்லது இரண்டாவது சுற்றைத் தொடங்குவதா என்ற கருத்துகள் வரவே,வாக்கு எண்ணும் முகவர்களுக்கும்,வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய வாக்கு நிலவரப்படி,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…