வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சட்டப்பேரவையின் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அதாவது,முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14 வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால் அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,தவறு உள்ள இயந்திரத்தின் வாக்குகளை பிறகு எண்ணிக்கொள்வதா அல்லது இரண்டாவது சுற்றைத் தொடங்குவதா என்ற கருத்துகள் வரவே,வாக்கு எண்ணும் முகவர்களுக்கும்,வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய வாக்கு நிலவரப்படி,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…