“கோவையில் இரு தினங்களுக்கு இதற்கு தடை” – காவல்துறை உத்தரவு!

Default Image

கோவை:இரு தினங்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால் இரு தினங்களுக்கு கோவை நகரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக,கோவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

drone camera

“வருகின்ற 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோவை வருகையையொட்டி கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா(Drone camera) சாதனங்கள் பறப்பதற்கு மேற்படி தினங்களில் தடைவிதிக்கப்படுகிறது என்பதை கோவை மாநகர காவல் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”,என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்