10.58 லட்சம் பேர் பங்கேற்கும்- Civil சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று.!

Published by
kavitha

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை  சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது.

நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர்  இன்று எழுத உள்ளனர்.

அதே போல தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் சென்னையில் 62 மையங்களில் நடைபெறுகிறது இத்தேர்வை 22,000 பேர் எழுதுகின்றனர் தேர்வு மையங்களை தங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று UPSC இதற்கு முன் அறிவித்திருந்த நிலையில், 60,000 தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களை விருப்பத்துக்கேற்ப மாற்றியிருப்பதாக UPSC தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சத்துக்கிடையே நடைபெறும் தேர்வு இன்று காலை 9.30 மணி மற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது.தேர்வுக்காக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ள UPSC, தேர்வர்கள் அவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

முகக்கவசம் அணிந்து, ஹால் டிக்கெட்டுடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள்ளாக அனுமதிக்கப்படுவர் என்றும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.

OMR Sheet முறையில் நடைபெறும் தேர்வை எழுத கறுப்பு நிற பேனாவை தேர்வர்கள் எடுத்து வர வேண்டும் என்றும், வெளிப்படையான பாட்டிலில் சானிடைசரை எடுத்துவர வேண்டும்.தனி மனித இடைவெளி கட்டாயம், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம், அடையாள அட்டை கட்டாயம், மின்னணு சாதனங்கள் கூடாது போன்ற அறிவுறுத்தகளுடன் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago