தேனியில் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்ட உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.
தாமரைக் குளத்தை சேர்ந்த பிளவேந்திர ராஜா, ஆரோக்கியமேரி தம்பதியருக்கு ஆறு மாதத்தில், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெற்றோரை அழைத்து குழந்தையை பிளாஸ்டிக் பாக்கெட்டில் போட்டு, குழந்தை இறந்து விட்டதாக கூறி குழந்தையை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய சென்றபோது 2 மணி நேரம் கழித்து அந்த குழந்தை கைகளை ஆட்டியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு இதய துடிப்பு இருந்ததால் சிகிச்சைக்காக மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன் அவர்கள் கூறுகையில், இந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே எடை இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…