பிபின் ராவத் உருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை..!

Default Image

மருத்துவர் சஞ்சய்குமார்- லட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது. 

சென்னை, அனகாபுத்தூரில், கிரீன் வேளச்சேரி அமைப்பும், பொதுமக்களும் இணைந்து பிபின் ராவத் திருவுருவப் படத்தை வைத்து, ராணுவ விமான விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர். அப்போது இராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மருத்துவர் சஞ்சய்குமார்- லட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்