தஞ்சையில் பானிபூரி குருமாவிற்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா தங்களது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ரிஷி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுசியா பானி பூரி குருமா தயார் செய்து அந்த ஒன்றில் சூடாக கீழே இறக்கி வைத்துள்ளார். அதன்பின் அவர் மற்ற வேலைக்கு சென்ற பின் அந்த அருகில் கவனிக்க ஆள் இல்லாத நேரத்தில் அவ்வழியே வந்த குழந்தை ரிஷி விளையாடியபடி தவறி விழுந்துள்ளார். இதனால் படுகாயமுற்ற குழந்தை சத்தம் கேட்டு தாய் ஓடி வந்த நிலையில் அவரை அம்மா சமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பானிபூரி குருமாவிற்குள் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,திருவிடைமருதூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…