மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

மாணவ, மாணவியர்களுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவு.
உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக மாணவ, மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் இந்த வகை சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இவ்வகை சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவியர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025