முதல்வரின் தாயார் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – விஜயகாந்த்
முதல்வரின் தாயார் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி, உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.மேலும் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.மேலும் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.@EPSTamilNadu pic.twitter.com/AOt7ilByEx
— Vijayakant (@iVijayakant) October 13, 2020