இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார்.
இந்த நிலையில், இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். நாளை பிற்பகல் 2.30க்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும், 3.30க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30க்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் சந்திக்கிறார். ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் சேர்ந்து சந்திக்கவுள்ளனர்.
மேலும், 1ம் தேதி மாலை 4.30க்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நீட், மேகதாது, ஜிஎஸ்டி நிலுவை தொகை, நிவாரணம் உள்ளிட்டவைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…