சென்னையில் விரைவில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்-அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னையில் விரைவில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். சென்னையில் ஆயிரம் அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் ஏற்பட்ட விபத்து எதிர்பாராதது என்று தெரிவித்தார். பணிமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கியுள்ளார். மேலும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிமூலமும் மேம்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்