“தாய் உள்ளம், தந்தையின் அக்கறையுடன் சிறப்பு திட்டங்கள் அறிவித்த முதல்வர்” – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு..!

Published by
Edison

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்தார்.

அதன்படி,தமிழக சட்ட பேரவையில் இன்று, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும்,இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

இந்நிலையில்,இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார் என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள, இலங்கைத் தமிழர்களின் கல்வி, உணவு, பொருளாதாரம், வாழ்வாதார மேம்பாடு என தாய் உள்ளத்துடன், தந்தையின் அக்கறையுடன், பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எண்ணற்ற நன்றிகள்”,என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஏதிலியான மக்களுக்கு, எல்லாமுமாக இருப்போம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது கழக அரசு என்றும் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

2 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

4 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

6 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

7 hours ago