சட்டப்பேரவையிலேயே திமுக எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை.

தமிழக சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின் என வரிசையாக  பாராட்டுவதை வழக்கமாக கொண்டியிருந்தார்கள்.

இதுபோன்று புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரையமாவதாக கூறி, இதனை செய்யவேண்டாம் என தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றே கண்டிப்புடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புகழ்ந்து பேசிய திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் நேரத்தை வீணடித்தால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேரத்தின் அருமை கருதி மானியக்கோரிக்கை விவாதத்தில் என்னை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எதையும் லிமிட்டாக வைத்துக்கொள்ளுங்கள், நேற்றே அவை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்ததாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மானிய கோரிக்கை விவாதத்தில் புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறியும், திமுக எம்எல்ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசியதால் முதலமைச்சரை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago