முதலமைச்சர் கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர் – மு.க ஸ்டாலின்.!

Default Image

சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் இருந்தே இது அரசியல் செய்யும் நேரம் இல்லை என திமுக புரிந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினோம். ஆனால், எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் தற்போது மக்களின் உயிருக்கு பாதிப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது.

#BREAKING: அரசின் அலட்சிம்.. கொரோனா பரவல் அதிகரிப்பு.! மு.க.ஸ்டாலின்.!

பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும், நோயை கட்டுப்படுத்த தவறுவது ஏன்..? பெண்களின் கோரிக்கையை ஏற்காமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். சென்னையில் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து விட்டதையே, நோய் பரவல் காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சர் இருக்கிறார். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இறப்பின் எண்ணிக்கையை மறைப்பதில் தமிழக அரசிடம் உள்நோக்கம் உள்ளது என  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்