பயிர்காப்பீடு அவகாசம்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

Default Image

பயிர்காப்பீடு செய்ய இன்றே கடைசி தேதி என்பதை நீட்டித்து இம்மாதம் 30ஆம் தேதி வரையில் பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு, பயிர்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமே அந்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் , பயிர்காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கு இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை நீட்டித்து, இம்மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். ஏனென்றால், பல்வேறு விடுமுறைகள், விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறைகள் ஆகிய தினங்களில் பொதுசேவை மையங்கள் பெரும்பாலும் விடுமுறை என்பதாலும், தொடர் மழை பாதிப்பு காரணமாகவும் இன்னும் பெரும்பாலானோர் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கின்றனர். அதனால், 15.11.2022  எனும் கடைசி தேதியை 30.11.2022 என மாற்ற வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்