சென்னை:கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதே சமயம்,கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கோவில் செயல் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்,கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன எனவும்,கடமையை செய்ய தவறிய செயல் அலுவலர்,அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனையடுத்து,அடுத்த இரண்டு வாரங்களில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…