#Breaking:கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
Edison

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.2500 ரூபாய் வழங்கிய போது,அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும்,நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை,மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.

எனவே,நியாய விலைக் கடைகள் அருகில் ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்து தமிழக அரசுக்கு,உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”,எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து,இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,அப்போது,நிவாரான உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்,தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாவது,”தேர்தல் அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால்,அதில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும்,பேனர்கள் வைக்க கூடாது எனவும் முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.ஆனால்,அப்போதைய நிலையும்,தற்போதைய நிலையும் வெவ்வேறாக உள்ளது”,என்று வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து,நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”நிவாரண உதவி வழங்கும் போது,அரசை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது.

மேலும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை.ஆனால்,அதில் ஆளுங்கட்சியின் சின்னத்தைதான் பயன்படுத்த கூடாது.

அதுமட்டுமல்லாமல்,நிவாரணம் வழங்கும் நிகழ்வை,அரசியல் நிகழ்ச்சியாக மாற்ற கூடாது.மேலும்,நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிபாக பின்பற்ற வேண்டும்”,என்று உத்தரவிட்டனர்.

Published by
Edison

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

10 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

11 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

11 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

12 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

13 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

14 hours ago