3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதன்மை அமர்வு,பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வழக்காக எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து அதனை விசாரித்தது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி வாதிட்டனர். அப்போது,இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை,வெண்டிலேட்டர் வசதி,தடுப்பூசி குறித்த சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து,தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி,”மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது”, என்று தெரிவித்தார்.பின்னர்,வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில்,இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”கொரோனா 3 ஆம் அலை ஏற்படுவதற்கான எந்தவித அறிகுறிகள் இல்லை என்றாலும்,3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.எனவே, அதை சமாளிப்பதற்காக 2-ம் அலையை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்.
மேலும்,ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்றும்,மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”,என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…