இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னை:மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக,இன்று முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக,மறு உத்தரவு வரும் வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
எனினும்,நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது எனவும்,பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025