7 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு..!சென்னை வானிலை ஆய்வு மையம்

Default Image

7 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 செ.மீ. மழைப்பதிவானது. வலங்கைமானில் 19, திருவாரூர் மற்றும் நாகையில் தலா 17 செ.மீ. மழைப்பதிவு. பாபநாசம், பாம்பன், நீடாமங்கலம், கும்பகோனத்தில் தலா 15 செ.மீ. மழைப்பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்