வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தர மத்திய அரசு உறுதி – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்…!

Published by
Edison

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலையானது கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணம் தற்போது அதிகரித்துள்ளது.

இதனால்,போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாமல், பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்காக,தமிழக அரசானது,மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,டெல்லி சென்றுள்ளார்.

அதன்படி,மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கான கட்டமைப்பு உள்ளது.தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் 2 கோடி தடுப்பூசிகள் வழங்குவது,11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது,கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் குறித்தும்,கொரோனா 3 வது அலையை சமாளிக்க  ரூ.1,624 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அதன்படி,வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 15,87,580 டோஸ் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளது.

அதேபோல,கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.23,123 கோடியில் கணிசமான தொகையை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.இதனையடுத்து,குழந்தைகள் சிகிச்சை வார்டுகளை 20 சதவிகிதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசுகையில்,அதனை வேறு இடத்தில் தற்காலிகமாக தொடங்க முடியுமா? என பார்க்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது”, என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago