ஏழை குடும்பங்களுக்கு விரைவில் 2000 நிதியுதவி…. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல்….

Published by
Kaliraj

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை சமாளிக்கும் வகையில், ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கும் தமிழக அரசின் புதிய திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின்  பாதிப்பால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியிலான பாதிப்புகளில் இருந்து மீள்வது குறித்து ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி. ரங்கராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தன் பரிந்துரைகளை, சமீபத்தில், முதல்வர் எடப்பாடி அவர்களிடம் அளித்துள்ளது.

அதில், ‘பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில், ஏழை, எளிய மக்களுக்கு, பண உதவி வழங்கலாம்’ என, அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில், அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இந்த பண உதவியை வழங்குவது குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.’அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி’ என்ற பெயரில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மட்டும், 3,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை வரும், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். நிர்வாக நடைமுறைகளுக்குப் பின், மிக விரைவில், இந்த நிதி, தமிழக அரசுக்கு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், மிக விரைவில், 2,000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பை, தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago