சிபிஐயில் அரசியல் ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், இந்தியாவின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யில் நடைபெறும் நிகழ்வுகளும், அதன் உயர் அதிகாரிகள் மட்டத்தில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களும், நாடுமுழுவதும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில்,ரஃபேல் விமான பேர முறைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டும் சிபிஐ விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இதில் அரசியல்ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்கவே தோன்றுகிறது.இந்த சூழலில் சுதந்திரமான விசாரணை அமைப்பாக சி.பி.ஐ எப்படி செயல்படும்? என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…