குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

Default Image

சட்டப்பேரவைக்கு  குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று  நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு  உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து  இன்று  இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும்  என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்