பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் கூறியிருந்தார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நெடுஞ்சாலை டெண்டர் வழக்கு தொடர்பாக பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு புறம்பானதாக உள்ளதாக அறப்போர் இயக்கம் கருத்து கூறியுள்ளது. இதனால் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…