திமுக சார்பில் நடைபெறும் மனிதசங்கிலி போரட்டத்திற்கு அனைவர்க்கும் அழைப்பு..,

Published by
Dinasuvadu desk

திருச்சி: வருகின்ற 23ம் தேதி(நாளை)திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  மனித சங்கலி அறப்போராட்டம் நடைபெற இருகின்றது.

இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர்அறிக்கை வெளியிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி போராட வேண்டிய மாநில அதிமுக அரசோ, மத்திய அரசின் கைப்பாவையாக மாறி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி கொண்டுள்ளது. எனவே தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் திருச்சியில் நாளை (23ம் தேதி) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது.இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவர்க்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு நகர, ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்.  திருச்சி மாநகரத்திற்கு- ஜங்சன் பெரியார் நினைவு தூண், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு-தலைமை தபால் நிலையம், துவாக்குடி நகரம், மேலப்புதூர், அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம்-பாலக்கரை, மணப்பாறைநகரம், மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம்- காந்தி மார்க்கெட், மருங்காபுரி, புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியம்-மரக்கடை, மண்ணச்சநல்லூர், முசிறி ஒன்றியம், துறையூர் நகரம்-மெயின்கார்டுகேட், துறையூர் ஒன்றியம்-ஜோசப்கல்லூரி, உப்பிலியபுரம், தாத்தயங்கார்பேட்டை ஒன்றியம்-சத்திரம்பேருந்து நிலையம், தொட்டியம் ஒன்றியம்-கலைஞர் அறிவாலயம்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago