DMK Candidate Anniyur Siva - PMK Candidate C Anbumani
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைமுறை வழக்கத்தை போல இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். அதே போல, பனையபுரத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 110 வாக்குசாவடிகளில் மட்டும் வெப் கேமிரா பொருத்தி வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதாமாக ஆரம்பிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல, 7 மாநிலங்களில் விக்கிரவண்டியுடன் சேர்த்து மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சட்டமன்ற தொகுதிகளுகான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் இறப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…