இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது- தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில்  66.10% வாக்குகளும், விக்கிரவாண்டி – 84.36% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்