விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதி : திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்

Default Image

தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அண்ணா அறிவாலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடத்தப்படும். அதன் பின்பு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்